search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கரி சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டம் - உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் பேட்டி
    X

    உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து. 

    நிலக்கரி சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டம் - உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் பேட்டி

    • நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
    • குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.

    பல்லடம் :

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- பொன் விளையும் பூமி என்று அழைக்கப்படும் தஞ்சை டெல்டா பகுதியில், மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் என்பது முட்டாள்தனமா னது. இந்த திட்டம் டெல்டா மாவட்டங்களை கடுமையாகப் பாதிப்பதுடன், உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார த்தையும் பாதிக்கும்.

    நிலக்கரி திட்டத்திற்கு சுரங்கம் அமைக்கும்போது அந்த பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும். சுமார் 40 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் அங்குள்ள அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் வாழ்வாதார த்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.எனவே நிலக்கரி சுரங்கத் திட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஜாதி, மதம், அரசியல் கட்சி பேதம் இன்றி எந்தவிதமான தியாகத்தையும் செய்து,தஞ்சை வேளாண் மண்டலத்தை காப்போம். ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்ட ங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்துள்ளது. இதன்படி பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில், எந்த ஒரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பா ட்டையும் மேற்கொள்ள க்கூடாது என்று மிகவும் தெளிவாக குறிப்பிடப்ப ட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு அரசு ,மத்திய அரசுக்கு கடுமையாக அழுத்தம் அளிக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்க ளைத் திரட்டி, போரா ட்டங்கள் முன்னெடுக்க ப்படும்.விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஆளுகின்ற பா.ஜ.க.அரசு விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டங்களை அறிவித்து நல்ல பெயர் எடுப்பதை விட்டுவிட்டு, இது போன்ற விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அறிவித்து ஏனோ கெட்ட பெயரை சம்பாதிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம்,மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம்.சங்கீத பிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×