search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் - அழகி-புரோக்கர் உள்பட 4பேர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் - அழகி-புரோக்கர் உள்பட 4பேர் கைது

    • 3 பெண்கள், 3 வாலிபர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
    • மீட்கப்பட்ட 2 பெண்கள் கோவை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 3 பெண்கள், 3 வாலிபர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண் மற்றும் 3 வாலிபர்கள் விபசார புரோக்கர்களாக செயல்பட்டதும், மற்ற 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து விபசார புரோக்கர்களான சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தாலுகா காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கின்ற சேர்மகனி (வயது 31), ஊத்துக்குளி ஹவுஸிங் யூனிட் டாலர் சிட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்கின்ற செந்தில்குமார் (41), நாகப்பட்டினம் பிரிஞ்சி மூளை லெனின் தெரு பகுதியை சேர்ந்த அகிலன் (23), அதே பகுதியை சேர்ந்த விஸ்வந்த் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.மீட்கப்பட்ட 2 பெண்கள் கோவை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

    Next Story
    ×