search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளுவங்காட்டூா்-கோட்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    கிளுவங்காட்டூா்-கோட்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகா், கோவிந்தாபுரம், அமராவதி நகா் செக்-போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூா் மற்றும் ஆலாம்பாளையம்.

    கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 2மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம்.

    Next Story
    ×