search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் பாதிப்பு
    X

    நால்ரோடு சந்திப்பில் குவிந்து கிடக்கும் குப்பைகளை படத்தில் காணலாம்.

    பல்லடத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் பாதிப்பு

    • ரோட்டோரங்களில் சிலர் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.
    • நால்ரோடு சந்திப்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் இடுவாய்,திருப்பூர்,வேலம்பாளையம் செல்லும் ரோடுகள் சந்திக்கும் நால்ரோடு உள்ளது.இந்த நால்ரோடு சந்திப்பில் ரோட்டோரங்களில் சிலர் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நால்ரோடு சந்திப்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அங்கு வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் குப்பைகளை வீசி செல்வதாக அந்தப்பகுதியினர் கூறுகின்றனர்.மேலும் சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர்.

    இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.எனவே அதிகாரிகள் இங்கு குப்பைகளை கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×