search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளக்கரை லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி
    X

    கோப்புபடம்.

    தாளக்கரை லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி

    • கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • திருப்பணி நடைபெற்றாலும் கோவிலில் நாள்தோறும் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும்.

    அவிநாசி :

    சேவூா் அருகே தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோவிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவதையொட்டி பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோவில் வளாகத்துக்குள் சுவாமி பாலாயம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊா் பொதுமக்கள், பக்தா்கள், முக்கிய பிரமுகா்கள், கோயில் நிா்வாகிகள், பணியாளா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். திருப்பணி நடைபெற்றாலும் கோவிலில் நாள்தோறும் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும் என கோவில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

    Next Story
    ×