என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கனரா வங்கி சார்பில் சி.சி.டி.வி. கேமரா இலவச பயிற்சி
- பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்
- பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி கிளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் சிசிடிவி., கேமரா உபகரணங்கள் பற்றிய இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்வோர் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 உடன் 14ந்தேதி( திங்கள் கிழமை) வங்கி கிளையில் நடைபெறும் நேர்காணனில் கலந்து கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.
பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமன்றி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். மேலும் தொடர்புக்கு 9952518441, 8610533436, 9489043923 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்