search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுகாதார வளாகத்தை பூட்டிவைத்த அதிகாரிகள் - பொதுமக்கள் அவதி
    X

    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் சுகாதார வளாகம் பூட்டி கிடப்பதை படத்தில் காணலாம்.

    சுகாதார வளாகத்தை பூட்டிவைத்த அதிகாரிகள் - பொதுமக்கள் அவதி

    • பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடை வீதியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இங்கு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு வழக்கம் போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர்.

    அவர்களில் சிலர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முயன்ற போது அது பூட்டி இருந்தது. இதுகுறித்து அங்குள்ள அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அதுவும் பூட்டி இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ,சாமி தரிசனம் செய்ய வரும் நேரங்களில் சுகாதார வளாகத்தை பூட்டி விட்டு அலுவலகத்தையும் பூட்டிவிட்டு அதிகாரிகள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.

    பதில் சொல்லவும் ஆளில்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×