என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொங்கலையொட்டி மொச்சை சாகுபடி அறுவடை பணிகள் தீவிரம்
- விளைச்சல் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
- விதைப்பின் போது இருக்கும் விலை, அறுவடையின் போது பல மடங்கு குறைந்து விடுகிறது.
உடுமலை:
உடுமலை அருகே ஜல்லிபட்டி, மானுப்பட்டி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் பருவமழையை அடிப்படையாக கொண்டு மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக வடகிழக்கு பருவமழை சீசனில் மொச்சை பல ஆயிரம் ஏக்கரில் விதைப்பு செய்யப்படுகிறது. மேலும் வனப்பகுதியிலுள்ள ஈசல் திட்டு உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இச்சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.
பொங்கல் சீசனை இலக்காக வைத்து இச்சாகுபடியை பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையும் மொச்சைக்கு சந்தைகளில் தனி கிராக்கி உள்ளது.ஆனால் அறுவடைக்கு தயாராகும் சாகுபடியில் காட்டுப்பன்றிகளால் சேதம், விளைச்சல் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். மேலும் விதைப்பின் போது இருக்கும் விலை, அறுவடையின் போது பல மடங்கு குறைந்து விடுகிறது. இருப்பு வைத்து விற்பனை செய்யவும் போதிய வசதிகள் இல்லாததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
மொச்சை சாகுபடிக்கு உழவு, மருந்து, களை எடுத்தல் என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு 600 கிலோ வரை விளைச்சல் இருக்கும். அறுவடையின் போது விலை சரிவை தடுக்க ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக மொச்சையை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்