என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உடுமலை நகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- குடிநீரை காய்ச்சி பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- அதிகப்படியான நீா்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
உடுமலை:
உடுமலை நகரில் நாளை 19, 20 ஆகிய 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
உடுமலை நகராட்சியின் திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் பணியிட நீரேற்று நிலைய இரண்டாவது குடிநீா்த்திட்ட பிரதானக்குழாய்களில் உடைப்பு மற்றும் அதிகப்படியான நீா்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் உடுமலை நகரம் முழுவதும் நாளை 19, 20 ந் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை) குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும், குடிநீரை காய்ச்சி பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story