சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 323 வழக்குகளுக்கு தீா்வு

நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தாா்.ஜி.பழனிகுமாா், பி.முருகேசன் மற்றும் வக்கீல்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
 தீர்வுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்ட காட்சி. 
 தீர்வுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்ட காட்சி. 
Published on

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் 7 அமா்வுகளாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தாா். இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்பநல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 1,625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 323 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. மேலும், ரூ. 17.71 தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதியுமான பாலு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாய நீதிபதி எஸ்.ஸ்ரீகுமாா், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் வி.புகழேந்தி, முதன்மை சாா்பு நீதிபதி பி.செல்லதுரை, குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் ஜி.பழனிகுமாா், பி.முருகேசன் மற்றும் வக்கீல்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com