என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பல்லடம் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட குழு தொடக்க விழா
- பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
பல்லடம்:
பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட குழு துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனியன் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரிகள் அண்ணாதுரை, பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் பேசுகையில், தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் நீங்களும் இணைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்கண்ணா கல்லூரி இன்று பசுமையாய் காட்சியளிப்பதற்கு முழு காரணம் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களே. நாட்டு நலப் பணித்திட்டத்தில் இணைந்த நீங்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து, சமுதாயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்