

திருப்பூர்:
வக்கீல்கள் குடும்ப நல நிதி 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வக்கீல்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கள் நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வக்கீல்கள், மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் இனிப்பு வழங்கினர்.