

உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள பழமையான எந்திரங்களால் ஆலை அரவை பணிகளில் பெரும் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் பாதித்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ஆலை எந்திரங்கள் புதுப்பிக்கும் பணி, கரும்பு அரவைக்கு வாகனங்களில் இருந்து இறக்க ரோப் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் 10 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. நடப்பாண்டு கரும்பு அரவை வருகிற 21-ந் தேதி துவக்க உள்ளது. இதற்காக கடந்த 10ந்தேதி ஆலை பாய்லர்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தது. ஆலை அரவை பணிகள் துவங்க குறுகிய நாட்களே உள்ளதால் எந்திரங்கள் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.