

திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு பாரப்பாளையம் பள்ளியில் விடுமுறை முடிந்து முதல் நாள் வகுப்பிற்கு வருகை தந்த மாணவ மாணவிகளுக்கும், அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கும் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தார்.
இதில் தலைமை ஆசிரியர் அருணா மற்றும் ஆசிரியர் கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆட்டோ கோவிந்தராஜ் ,அரிமா சுரேஷ் ,அரிமா பிரகாஷ் ,போதியப்பன் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.