முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சி

மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
ம.தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 
ம.தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே அருள்புரத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்த ஈழ தமிழர்களின் 14ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., பொருளாளரும், பல்லடம் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஆர். ரவி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com