மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் விலையில்லா ஸ்கூட்டர்அமைச்சர் வழங்கினார்

29 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன்   வழங்கிய காட்சி.
விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும்ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி,சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைதேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். மேலும், தமிழகஅரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும்பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டுநமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிநலத்துறையின் சார்பில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம்ரூ.24.21 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும்நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரட்சி ஒன்றியங்களை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com