search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    முகூர்தத்கால் நடும் விழா நடைபெற்றது. கொண்டத்து காளியம்மன்.

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

    • கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 29ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 8-ந் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 29ந் தேதி கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவில் ஏப்ரல் 2-ந் தேதி பொங்கல் வைத்தல், 3ந் தேதி காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ந்தேதி அதிகாலை4 மணிக்கு குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 8-ந் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.குண்டம் திருவிழாவில் திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல பஸ் வசதி மற்றும் கோவில் வளாகத்தில், குடிநீர், மொபைல் டாய்லெட், பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்பு அமைத்தல் போன்ற நடவடிக்கையில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.குண்டம் மற்றும் தேர்த்தி ருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, தக்கார் பெரிய மருது பாண்டியன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×