என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் அருகே விவசாயி வீட்டில் நகை பணம் கொள்ளை
- வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.
- பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சுப்பிரமணி (58) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து வைத்திருந்த 14பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விவசாயி சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story