search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம், தாராபுரம் பகுதியில் தொடர் கொள்ளை பொதுமக்கள் - வியாபாரிகள் அச்சம்
    X

    கோப்புபடம்.

    காங்கயம், தாராபுரம் பகுதியில் தொடர் கொள்ளை பொதுமக்கள் - வியாபாரிகள் அச்சம்

    • போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
    • வீட்டில் திருடிய கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம், நெய்க்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகாா்த்திகேயன் (வயது 31). இவா் நெய்க்காரன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.இந்நிலையில், வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். நேற்று காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் திருட்டுபோனது தெரியவந்தது.

    இதேபோல நெய்க்காரன்பாளையத்தை அடுத்துள்ள புதூா் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் தங்கவேல் (44) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், புதூா் பிரிவு அடுத்துள்ள ஆலாம்பாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சதீஷ்குமாா் (24) என்பவரது இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ. 67ஆயிரத்தை மா்ம நபா்கள் ஒரே இரவில் திருடிச் சென்றுள்ளனா்.

    இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளா்கள் புகாா் அளித்தனா்.வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயம், தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தாராபுரத்தில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே அந்த கும்பல் காங்கயம், தாராபுரம் பகுதியில் தங்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என தெரிகிறது. எனவே கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காங்கயம், தாராபுரம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×