search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி அருகே பாறைக்குழியில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ
    X

    பாறைக்குழி குப்பையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தபோது எடுத்த படம்.

    திருமுருகன்பூண்டி அருகே பாறைக்குழியில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ

    • பாறைக்குழியில் உள்ள குப்பை தீப்பிடித்து எரிவதாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது.
    • இரவு 11 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் கணபதிநகரில் தனியாருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட பாறைக்குழி உள்ளது. அங்கு திருமுருன்பூண்டி நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பாறைக்குழியில் உள்ள குப்பை தீப்பிடித்து எரிவதாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது. இதன்பேரில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் பாறைக்குழி ஆழமாக இருந்ததால் பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தனியார் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரவு 11 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று 2-வது நாளாகவும் குப்பைகள் பற்றி எரிகின்றன. இதையடுத்து அவிநாசி தீயணைப்பு நிலைய வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×