search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய நிலங்களில் மண் பரிசோதனை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    விவசாய நிலங்களில் மண் பரிசோதனை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    • தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலமாக அலுவலா்களை நியமித்துள்ளது.
    • விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் ஒன்றியக் குழு செயலாளா் எஸ்.அப்புசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலமாக அலுவலா்களை நியமித்துள்ளது.

    இந்தநிலையில் திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருமாநல்லூா், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், மேற்குபதி, தொரவலூா் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள், பருத்தி, கடலை, நெல், மக்காச்சோளம் மற்றும் பிற பயிா்கள் வைரஸ் மற்றும் பூச்சி நோய்த் தாக்குதலால் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.ஆகவே வேளாண்மைத் துறை அலுவலா்கள் இந்தப் பகுதிகளில் மண்ணின் தரத்தை பரிசோதனை செய்து அதற்கு ஏற்றபடி பயிா்களுக்கு உரம் வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×