search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உல்லன் தயாரிப்பு மாலைகள்- கற்றாழை நார் அலங்கார பொருட்கள்
    X

    கோப்புபடம்.

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உல்லன் தயாரிப்பு மாலைகள்- கற்றாழை நார் அலங்கார பொருட்கள்

    • தாமரை மணி மாலைகள், ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரி, கற்கண்டு மாலைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
    • நியூசிலாந்தில் நடக்கும் திருவிழாவுக்காக உல்லன் நூலில் இருந்து மாலைகள் தொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து நூலிழையில் ஆடைகள் உற்பத்தி செய்வது வாடிக்கை என்றாலும் உல்லன் நூலில் மாலைகள் தொடுத்து கொடுக்கும் ஆர்டர்களையும் திருப்பூர் பெற்றிருக்கிறது.திருப்பூர், அவிநாசி பகுதிகளில் இருந்து திருப்பதி, திருச்செந்தூர் கோவில்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மலர்மாலைகள், தாமரை மணி மாலைகள், ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரி, கற்கண்டு மாலைகள் என விதவிதமான மாலைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    நியூசிலாந்தில் நடக்கும் திருவிழாவுக்காக உல்லன் நூலில் இருந்து மாலைகள் தொடுக்கும் பணி திருப்பூரில் மும்முரமாக நடந்து வருகிறது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மலர் நிலையம் நடத்தி வருபவர் சண்முகம். இவருக்கு மொத்த பூ வியாபாரி மூலமாக, நியூசிலாந்துக்கு மாலை தொடுத்து கொடுக்கும் ஆர்டர் கிடைத்துள்ளது.

    நியூசிலாந்தில் நடக்கும் திருவிழாவுக்காக உல்லன் மாலைகள் ஆர்டர் கிடைத்தது. அதற்காக 50 கிலோ உல்லன் நூல் வாங்கி வந்து, மாலைகள் தயாரித்து வருகிறோம். ஒருகிலோ உல்லன் நூல் 800க்கு கிடைக்கிறது. இரண்டு கிலோ நூலில் மூன்று அடி நீளமுள்ள ஒரு மாலை தயாரிக்க முடியும்.ஆண்டாள் மாலை போன்ற 16 மாலைகள் தொடுத்துள்ளோம். குறைந்தபட்சம் மூன்று அடி நீளத்தில் துவங்கி 12 அடி நீளம் வரையில் மாலைகள் தொடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பதால் கோவில் மற்றும் தேர் அலங்காரத்துக்காக இத்தகைய ஆர்டர் கொடுக்கி ன்றனர். மதுரையில் இருந்து விமானத்தில் அனுப்பி வைத்தோம் என்றார் பூ வியாபாரி சண்முகம்.

    வேலி கற்றாழை நார் வாயிலாக தயாரிக்கப்படும் அலங்காரப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில் கிராம மற்றும் கதர் வாரிய தொழில் கூட்டமைப்பு வாயிலாக, குறு, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர். கிரா கதர்வாரிய தொழில் கூட்டமைப்பு சார்பில், திருப்பூரில் மாநில அளவிலான கண்காட்சி நடந்து வருகிறது. இதில் மகளிர் குழுவினரால் செயல்படும் திருநெல்வேலி, சேரன்மாதேவி தாலுகாவை சேர்ந்த சுய தொழில் நிறுவனத்தினர் தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    வேலி கற்றாழையில் இருந்து பெறப்படும் நார் வாயிலாக விதம் விதமாக பொம்மை தயாரித்துள்ளனர். குளிப்பதற்கு உடலில் தேய்க்க பயன்படுத்தும் நார், கற்றாழையில் இருந்து தயாரிக்கின்றனர். அதில் வெட்டி வேரும் பயன்படுத்துகின்றனர்.அலங்கார விளக்கு கூம்பு, கீ செயின் உள்ளிட்ட பொருட்க ளையும் தயாரிக்கின்றனர். இவற்றுடன் வாழை நாரில் இருந்து விதம் விதமாக கூடைகளும் தயாரித்து சந்தைப்படுத்துகின்றனர்.

    விற்பனை நிறுவனத்தினர் கூறுகையில், கற்றாழை நார் வாயிலாக தயாரிக்கப்படும் கைவினை பொருட்களை இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இத்தகைய பொருட்களுக்கு வெளிநாடுகளில் கிராக்கி அதிகம். உள்ளூரிலும் சந்தைப்படுத்தி வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×