search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலம் அருகே பனியன் கம்பெனியில் திருடிய ஊழியர் கைது
    X

    கோப்புபடம்

    மங்கலம் அருகே பனியன் கம்பெனியில் திருடிய ஊழியர் கைது

    பனியன் கம்பெனியில் ஸ்டோர் பொறுப்பாளராக பணியாற்றிய திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 41) என்பவரிடம் விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மங்கலம்:

    மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த பனியன்கம்பெனியில் இருந்து சமீபத்தில் 6 நூல் பைகள் திருடு போனது. இது தொடர்பாக பனியன் கம்பெனி நிர்வாகிகத்தினர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பின்னர் மங்கலம் போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பனியன் கம்பெனியில் ஸ்டோர் பொறுப்பாளராக பணியாற்றிய திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 41) என்பவரிடம் விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த மங்கலம் போலீசார் ராஜேஸ்குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×