பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திருடினால் மின் இணைப்பு துண்டிப்பு - அதிகாரி எச்சரிக்கை

தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

 திருப்பூர்:

திருமூா்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு வருகிற 20-ந் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ளது. தொகுப்பு அணைகளில் நீா் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று உயிா் நீா் மட்டுமே திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து பல்லடம் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் எஸ்.ஆனந்த் பாலதண்டபாணி கூறியதாவது:-

பல்லடம் பகுதியில் 48 கிலோ மீட்டா் தொலைவுக்கு பிஏபி., பாசன வாய்க்கால் உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கடை மடை வரை தடையின்றி செல்வதற்காக வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீா் கடை மடை பகுதிகளான வெள்ளக்கோவில், குண்டடம் வரை முறையாக செல்வதையும், தண்ணீா் திருட்டையும் அந்தந்தப் பகுதி பாசன சபைத் தலைவா்கள் கண்காணிக்க வேண்டும். வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரைத் திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். மேலும் தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீா் திருட்டை கண்காணிக்கும் வகையில் காவல் துறை, வருவாய் துறை, நீா்வளத் துறை மற்றும் மின்சாரத் துறை அலுவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றாா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com