search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்
    X

    குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    கள்ளிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்

    • கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
    • தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் உடனமர் தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பின்னர் கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு பரந்தாமனும் பாஞ்சாலியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கள்ளிப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. மதியம் தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு பவளக்கொடி கும்மியாட்டமும் நடைபெற்றது.

    7-ந் தேதி உருவாரம் கொண்டு வருதலும், இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உச்சி கால பூஜையும், மாலையில் கலாசாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×