என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மழையால் இளநீர் விலையில் மாற்றம்
- இளநீர் தேவைக்காக வீரிய ஒட்டு ரக தென்னைமரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
- மழையின் காரணமாக இந்த வாரம் இளநீர் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
உடுமலை :
உடுமலை பகுதியில் இளநீர் தேவைக்காக வீரிய ஒட்டு ரக தென்னைமரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இதில் உற்பத்தியாகும் இளநீர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில் மழை காரணமாக இளநீர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இளநீர் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், நாடு முழுவதிலும் பல இடங்களில் மழை பெய்கிறது. அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் மட்டுமே இளநீருக்கான தேவை குறைந்துள்ளது. மழையின் காரணமாக இந்த வாரம் இளநீர் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 28 ரூபாயாகவும்,எடைக்கு ஒரு டன் இளநீர் 10,250 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
Next Story






