search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் நாளை மாற்றம்
    X

    கோப்புபடம்.

    பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் நாளை மாற்றம்

    • குளித்தலை-பெட்டவாய்த்தலை ரெயில் நிலையம் இடையே பொறியியல் பணி நாளை நடைபெற உள்ளது.
    • கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    திருப்பூர் :

    குளித்தலை - பெட்டவாய்த்தலை ரெயில் நிலையம் இடையே பொறியியல் பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுன் - திருச்சி டவுன் செல்லும் ரெயில் காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரெயில் நாளை பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இதுபோல் திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில், திருச்சியில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காட்டை இரவு 8.25 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் நாளை திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. கரூரில் இருந்து பாலக்காடு வரை ரெயில் இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×