search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் மீட்பு
    X

    கோப்புபடம்.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் மீட்பு

    • ஆழமான பகுதிக்குச் சென்ற வாலிபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
    • குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டம், மூலனூரைச் சோ்ந்தவா் எஸ்.தினேஷ்குமாா் ( வயது 24). கட்டடத் தொழிலாளியான இவா் தனது தம்பி கவின்குமாா், நண்பா் அமீருடன் தாராபுரம் அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற தினேஷ்குமாா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவருடன் குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் ஆற்றில் இறங்கி அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

    ஆனால் மீட்க முடியவில்லை. இந்த நிலையில், அமராவதி பழைய பாலத்தின் அருகில் ஒருவரது சடலம் மிதந்து வருவதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.இதன் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    Next Story
    ×