search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் அனைவரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்  அதிகாரி அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    பெண்கள் அனைவரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்

    • பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
    • பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 சாா்பில் பெண்கள் ஆரோக்கியம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவரஞ்சனி பேசியதாவது:- பெண்கள் அனைவரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

    இதன் மூலமாக மாா்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் வராமல் தடுக்க இயலும். பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.இதற்கு அவா்களுக்கு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து முக்கியமானதாகும்.ஆகவே கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவு வகைகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.இக்கருத்தரங்கில் நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×