அரசு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

இயக்க இயலாத வாகனங்களுக்கு கழிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

மாநில அரசுத்துறை களில் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் தமிழக மோட்டார் வாகன பரா மரிப்புத்துறையால் பராமரிக்கப்படுகிறது.தவிர, பழுது நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்டம் தோறும் தானியங்கி பணிமனைகளும், மண்டல துணை இயக்கங்களும் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.

அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், அரசுத்துறை வாகனங்களின் ஆயுள் கண்காணிக்கப்பட்டு இயக்க இயலாத வாகனங்களுக்கு கழிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் உடு மலையில் மருத்துவம், வேளாண்மை, சுகாதார த்துறை, வருவாய் என பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளுக்கான வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக புதிய வாகனங்கள் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உடுமலை யைச்சேர்ந்த அரசு வாகன ஓட்டுனர்கள் கூறிய தாவது:- மத்திய அரசின் காலாவதி வாகனச்சட்டப்படி, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்ப ட்டு வருகின்றன.அதன்படி தமிழக அரசுத்துறைகளில் இயக்கப்படும் காலாவதி யான வாகனங்களுக்கு கழிவு சான்றளித்து பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.இந்த விபரம், மத்திய அரசின் https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்தில் உள்ளது.

இருப்பினும் அரசுத்துறைகளில் பழைய வாகனங்களே இயக்கப்ப டுகிறது.பரா மரிப்புச்செலவு அதிகரிப்பதால் அதற்கு மாற்றாக புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறி னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com