தீயணைப்பு அலுவலர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ வைரல்

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் அதிகாரிகள் விசாரணை
தீயணைப்பு அலுவலர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ வைரல்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழாவிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ஆம்பூர் தீயணைப்பு துறை அலுவலர் மேகநாதனிடம் விழா குழுவினர் சிலர் சென்றனர்.

அப்போது பணியில் இருந்த தீயணைப்பு அலுவலர் மேகநாதன் தடையில்லா சான்றிதழை வழங்க ரூ.3 ஆயிரம் வேண்டும் என லஞ்சமாக கேட்டது போன்ற வீடியோ சமூக வளையங்களில் வைரலாக பரவியது இந்த வீடியோ ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது போன்ற லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்மந்தமாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com