search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் மோதி விவசாயி பலி
    X

    அரசு பஸ் மோதி விவசாயி பலி

    • மனைவி படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாயனசெருவு ஊராட்சி பந்தூ ரான் வட்டத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 48), விவசாயி. இவரது மனைவி சுசிலா (35). நேற்று மாலை இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மல்லானூரில் உள்ள மருத் துவமனைக்கு சென்றனர்.

    தகரகுப்பம் அருகில் உள்ள வளை வில் சென்ற போது தொட்டிகிணறு பகுதியில் இருந்து நாட் றம்பள்ளி நோக்கி வந்த அரசு டவுன் பஸ் திடீரென மோட் டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுசிலா படுகா யம் அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் சுசிலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம் பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×