search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீர் பாட்டிலால் தொழிலாளி மீது தாக்குதல்
    X

    பீர் பாட்டிலால் தொழிலாளி மீது தாக்குதல்

    • மதுபாட்டிலை மேலே எறிந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பாச்சல் போஸ்ட்மேன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 21), கூலி தொழி லாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாக்கனூர் கூட்ரோடு அருகில் உள்ள கடையில் மீன் வாங்க சென்றார்.

    அப்போது கடையின் எதிரில் நின்று கொண்டு இருந்த பரிசன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (25) என்பவர் காலி பீர் பாட்டிலை தூக்கி எரிந்த போது உதயகு மார் மீது விழுந்தது.

    இதுகுறித்து உதயகுமார் கேட்கும் போது சூர்யா மற்றும் மராட்டியன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (24) ஆகி யோருக்கு வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த சூர்யா பீர்பாட்டிலால் உதயகுமார் தலை மீது தாக் கியுள்ளார் மேலும் ராஜேஷ் உதயகுமாரின் தலை மற்றும் முதுகு ஆகிய இடங்களில் கல்லால் தாக்கினார். இதில் படு காயம் அடைந்த உதயகுமார் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் காதர் கான் மற்றும் போலீசார் கட்டிட தொழிலாளிகள் சூர்யா, ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×