search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டி மீது பைக் மோதி டெய்லர் பலி
    X

    மாட்டு வண்டி மீது பைக் மோதி டெய்லர் பலி

    • சாலையின் வளைவில் திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெங்கடசமுத்திரம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 60). ஆம்பூரில் உள்ள கடையில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தாபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மாட்டி வண்டியின் மீது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×