search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
    X

    அரசு பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்

    • சத்துணவு பற்றாக்குறையாக வழங்குவதாக புகார்
    • சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கலைவாணி என்பவர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு சரிவர மதிய உணவு வழங்குவதில்லையாம். மேலும் உணவு பட்டியலை மாற்றி மதிய சத்துணவு பற்றாக்குறையாக வழங்கு வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று 449 மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள மதிய உணவுபட்டியல் படி சாதம், சாம்பார், முட்டையுடன் கூடிய உருளை கிழங்கு பொரியலுடன் உணவு சமைக்க வேண்டும்.

    ஆனால் அதனை மாற்றி கலவை சாதம், முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றை மாணவர்களுக்கு பற்றாக்கு றையாக சமைத்து வழங்கியுள்ளனர்.

    அந்த உணவு மாணவர்க ளுக்கு பற்றவில்லை. இதனால் சிலர் மதிய உணவு சாப்பிட வீடுகளுக்கு சென்றனர்.

    இதனால் அதிர்ச்சடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் ஒன்று திரண்டனர். மாணவர்களுக்கு பற்றாக்குறைவாக ஏன் உணவு சமைக்கிறீர்கள்? என கேட்டு பள்ளியை முற்றுகை யிட்டனர்.

    மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி, துணைத்தலைவர் பூபாலன், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினார். அப்போது அரிசி மற்றும் பருப்பில் வண்டுகள், பூச்சுகள் நிறைந்து கிடந்தது.

    மேலும் முட்டைகளை சரியாக வேக வைக்காமலேயே மாணவர்களுக்கு வழங்கு வதாக அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள், அவர்களுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சத்துணவு வழங்க பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையை ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி உள்ளிட்டோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சமையல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் சென்று பார்த்தபோது காலி அரிசி மூட்டைகளுக்கு நடுவே 2 அரிசி மூட்டைகள் மறைத்து பதுக்கி வைக்கபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த மூட்டை குறித்து கேள்வி எழுப்பிய போது தனக்கு தெரியாது என்று சத்துணவு அமைப்பாளர் அலட்சியமாக பதில் அளித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதா அவரை எச்சரித்ததோடு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×