search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
    X

    கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

    • கலெக்டரிடம் மாணவர்கள் வலியுறுத்தல்
    • மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    திருப்பத்தூர்:

    கல்லூரி நேரங்களில் கூடு தல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை யில் நடந்தது. அப்போது வீட் டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து 375 மனுக்களை பொதுமக்களிட மிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்திய தகுதி யானதாக இருப்பின் உடனடி யாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது கலெக்டர் பேசு கையில், பொதுமக்களிடம்இருந்து பெறப்பப்பட்ட கோரிக்கை மனுக்களில் காவல்துறை சம்பந்தப்பட்ட மனுக்கள் அதிக அளவு நிலு வையில் உள்ளது. இதனை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு உயர் அலுவலர்கள் கட்டாயம் வர வேண்டும் என கூறினார். அதைத்தொடர்ந்து மாற்றுதிற னாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுதிறனாளிக ளுக்கு 13 வகையான மருத்துவ உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் கந்திலி அருகே உள்ள கரியம்பட்டியில் இயங் கும் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்த னர். அதில் கல்லூரி பஸ் நிறுத் தத்தில் பஸ்கள் சரிவர நிற்பது கிடையாது.காலை நேரத்தில் 2 டவுன் பஸ்கள் மட்டுமே உள்ளது. திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் கல் லூரிக்கு சென்று வருகின்றனர். இதனால் கல்லூரி மாண வர்கள் பஸ்சின் படிச் க்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    இதனால் கல்லூரி மாண வர்களுக்கும், கண்டக்டருக் கும் இடையே அடிக்கடி பிரச் சினை ஏற்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங் களில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது. அதே போல் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த திருநங்கைகள், தங்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை என கூறி கலெக்டரிடம் முறை யிட்டனர். அவர் விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவி யாளர்கள் வில்சன்ராஜசே கர்,ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ண மூர்த்தி, கலால் உதவி ஆணை யர் பானு, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×