திருப்பத்தூரில் ரிங் ரோடு அமைக்க வேண்டும்

கூட்டத்தில் தீர்மானம் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க கோட்ட மாநாடு நடந்தது
திருப்பத்தூரில் ரிங் ரோடு அமைக்க வேண்டும்
Published on

திருப்பத்தூர்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வு ஊதியர்கள் சங்க கோட்ட மாநாடு திருப்பத்தூர் மாவட்ட மாநாடு திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோடில் உள்ள அரிமாசங்ககட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எம். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார், அனைவரையும் வாணியம்பாடி கோட்டத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார், மாநிலதுணைத்தலைவர் இரா. சுப்பிரமணியம் தொடக்க உரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பா.ரவி, மாவட்டச் செயலாளர் சி.ஏ.பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் கு செல்வராஜ் ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) க.அரிகரன், உதவி இயக்குனர் (தணிகை) மு.பிச்சாண்டி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள், கோடடநிர்வாகிகள், உட்பட கோட்டம் முழுவதிலிருந்து ஏராளமான கலந்து கொண்டு பேசினார்கள்.

இறுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபால் நன்றி கூறினார்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்தபோது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களும் அதே அகவிலைப்படி 3 சதவீதம் ஜனவரி 22 முதல் உயர்த்தி தர வேண்டும்.

ரிங் ரோடு

திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது உடனடியாக ரிங் ரோடு அமைத்து தர வேண்டும், ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டுத் தொகை ரூ497 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

பழைய தொகை ரூ .350 மட்டும் பிடிக்க வேண்டும், ஓய்வூதியர்களை குறை தீர்க்கும் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com