கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

பைக் பறிமுதல் போலீசார் விசாரணை
கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது பொன்னேரி டீக்கடை அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர் தடை செய்யப்பட்ட கேரளா மாநிலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கேரளா மாநில 360 லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள், செல் போன், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com