search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் 2 வாலிபர்களுக்கு அடி-உதை
    X

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

    அரசு ஆஸ்பத்திரியில் 2 வாலிபர்களுக்கு அடி-உதை

    • அண்ணன்- தம்பி கைது
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை அடுத்த சொரங்கன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மகன்கள் ஜானகிராமன் (30). தாமோதரன் (25). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் ரோஜாப்பூக்கள் பயிரிட்டுள்ளனர். பக்கத்து நிலத்தை சேர்ந்த ரவி மகன்கள் குமரேசன் (30), திருமூர்த்தி (28) ஆகிய 2 பேரும், நேற்று காலை அங்கு சென்று, பூக்கள் பயிரிடப்பட்டுள்ள நிலம் எங்களுக்கு சொந்தமானது' எனக்கூறியுள்ளனர்.

    இதற்கு ஜானகிராமன் தாமோதரன் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருமூர்த்தி, குமரேசன் இருவரும் சேர்ந்து, ஜானகிராமன், தாமோதரனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு குமரேசனும், திருமூர்த்தியும் வந்து சிகிச்சை பெற்று வந்த ஜானகிராமன், தாமோதரனிடம், 'உங்களை இங்கேயே கொன்றுவிடுகிறோம்' எனக்கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    பின்னர் பக்கத்தில் நின்றிருந்த ஜோதிரா ஜனையும் சரமாரியாக தாக்கினர்.தொடர்ந்து அவர்கள், அவசர சிகிச்சை பிரிவு அறையின் கண்ணாடி களை அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதைக்கண்டு பணியில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர். ஆனால் இவர்கள், டாக் டர்கள், செவிலியர்களை யும் மிரட்டி அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை சூறை யாடியுள்ளனர். இதனால் டாக்டர்கள், நர்ஸ்கள், நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட குமரேசன், திருமூர்த்தி ஆகிய 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலத்தகராறில் சகோ தரர்களை வெட்டிய அண்ணன், தம்பிகள் 2 பேரும் மருத்துவமனைக்குள் புகுந்து சூறையாடி டாக்டர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    Next Story
    ×