மது விற்ற 2 பெண்கள் கைது

12 பாட்டில்கள் பறிமுதல்கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
மது விற்ற 2 பெண்கள் கைது
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஜெயலட்சுமி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், கட்டேரி அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த பவுனம்மாள் (70) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com