search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு-கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு-கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்

    • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • விருது பெறுவோருக்கு தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    சர்வதேச மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் இந்த விருது பெறுவோருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது. அவ்வையார் விருதுக்கான கருத்துருக்களை தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தின் (https://awards. tn.gov.in) 20.11.2023-க்குள் சமர்பிக்க குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் 10-ந் வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×