கேரள கிராம பகுதியில் புலி நடமாட்டம்

இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுகிறது. புலி சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
கேரள கிராம பகுதியில் புலி நடமாட்டம்
Published on

ஊட்டி

தமிழக எல்லையான பாட்டவயலை அடுத்து கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட சீரால் குடுக்கி கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

இதை உறுதி செய்யும் வகையில், வனபகுதியில் இருந்து இரவு வந்த புலி சாலையை கடந்து அங்குள்ள வணிக நிறுவனத்தின் மதில் சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புலியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்றும், தங்களுக்கு வன விலங்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினா்.

X

Maalai Malar
www.maalaimalar.com