கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.
பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.
Published on

தூத்துக்குடி:

தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்  கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் எட்டையபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

பின்னர் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், வக்கீல்  பாலகுருசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 மேலும் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங்,

மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள்,

 வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன்,  ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், அண்டன் பொன்சேகா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், முத்துராமன், சங்கரநாராயணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி,

மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால்மாரி, டைகர் வினோத்து. ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜன்பாபு, சுபேந்திரன், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, ராமர், கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, அதிஷ்டமணி, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், முத்துவேல், சரண்யா, ஜான், ராமும்மாள்,

விஜயலட்சுமி, ரெக்ஸின், மகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், செல்வக்குமார், ஜெயசிங், தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, மரியதாஸ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், நாராயணன், டென்சிங், மூக்கையா, மற்றும் சுப்பையா, பிரபாகர், கருணா, அல்பர்ட், ராஜா, மகேஸ்வரசிங், அருணகிரி, பாலசுப்பிரமணி, பெரியசாமி, சிவசுந்தர், இசக்கி, அற்புதராஜ், பெலின்டஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.      

ம.தி.மு.க. சார்பில் ஓன்றிய செயலாளர் வீரபாண்டிய சரவணன், மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிரதிநிதி நெல்சன் முத்து நகர் கிளை செயலாளர் பிரபாகர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர் ராஜ் மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செய்திருந்தார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com