search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் மீது கார் மோதி பெண் பலி; தங்கை படுகாயம்
    X

    மொபட் மீது கார் மோதி பெண் பலி; தங்கை படுகாயம்

    • காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    காஞ்சீபுரம் தாலுகா புஞ்சையரசங் தாங்கல் கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி.

    இவர்களது மகள்கள் சுப்புலட்சுமி (வயது 29), பாவணா (16). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பாண் டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    வந்தவாசி - காஞ்சீபுரம் சாலையில் தூசி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் இவர்களது மொபட் மீது மோதியது. இதில் அக்காள் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் .

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாயார் மலர்கொடி தூசி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ் பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×