கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது பரிதாபம் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அடுத்த கரிபூரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 31). விவசாயி.

இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார்.

அப்போது அருகே இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார்.

இதில் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றில் மூழ்கி இறந்தார். வெகு நேரமாகியும் மணிகண்டன் வீட்டுக்கு வராததால் அவரைத் தேடி குடும்பத்தினர் இன்று காலை நிலத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது மணிகண்டன் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் சேத்துப்பட்டு போலீசா ருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மணிகண்டன் உடலில் கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இது சம்பந்தமாக சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com