search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசை வீடு எரிந்து நாசம்
    X

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த காட்சி.

    குடிசை வீடு எரிந்து நாசம்

    • மின் கசிவு ஏற்பட்டதால் விபரீதம்
    • சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த வட இலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 65). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விநாயகம், சங்கர் என 2 மகன்கள் உள்ளனர்.

    விநாயகம் சென்னை யிலும், சங்கர் வேலூரிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் மீனா மட்டும் குடிசை வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனா மகன் விநாய கத்தை பார்ப்பதற்காக குடிசை வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று வீட்டில் மின் கசிவு ஏற்பட்டது.

    இதனால் திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் வெடி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்து பார்த்தபோது குடிசை வீடு எரிந்து கொண்டிருந்தது.

    தீயை அணைத்தனர்

    பின்னர் செய்யாறு தீயணைப்புத்துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. அருகில் இந்த மற்றொரு சிலிண்டர் தீப்பிடித்துக் கொண்டிருந்ததை தீயணைப்பு வீரர்கள் மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×