பள்ளி மாணவி மாயம்

10-ம் வகுப்பு படித்து வந்தார் போலீசார் தேடி வருகின்றனர்
பள்ளி மாணவி மாயம்
Published on

வந்தவாசி:

வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த வியாழக்கிழமை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து இவரது தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com