search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது
    • சான்றிதழ்களின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும்

    திருவண்ணாமலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாம லையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட் டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்ப டிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களு டைய 4 பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமு ள்ளவர்கள்

    www.tnprivatejobs.tn.gov. in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/ NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்ய லாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று கொள்ளலாம்.

    எனவே திருவண்ணா மலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×