என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்பனை செய்த கணவன்- மனைவி கைது
- 47 பாட்டிகள், பைக் பறிமுதல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி 5 கண் பாலம் அருகே வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர்.
இதில் வந்தவாசி திண்டிவனம் சாலையைக் சேர்ந்த தேவேந்திரன் (வயது 47) மது பாட்டில் களை கடத்தியது தெரிய வந்தது.
அவரை கைது செய்தபோலீசார் 47 மதுபாட்டிகள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 120 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
பின்னர் தேவேந்திரனின் மனைவி சைதானியை (44) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தேவேந்திரன் இதயநோயாளி என்பதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
Next Story






