search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
    X

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் படித்து முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரையில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

    இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தோராயமாக 6,553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியி ட ங்களுக்கான தோராயமாக 3,587 பணியிடங்க ளுக்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்ப டவுள்ளதாக தெரிகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தினை சேர்ந்த தகுதியான, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி பயனடையும் வகையில், அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்டு 19-ந் தேதி தொடங்கி, வார நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அல்லது அலுவலக தொலைப்பேசி 04175-233381 என்ற எண்ணில் தங்களது பெயரினை வரும் 18-ந்தேதி க்குள் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு திருவண்ணா மலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×